Monday, May 7, 2012

கடைசிக் கொத்து


மறதியை
உன்
விருப்பின் படியே
செய்துகொள்
மலர்ப் பூங்கா
ஒருபோதும்
எம்மை ஞாபகப்படுத்தாது

உன்
கண்களோ
இகழப்பட்ட
சுத்தமான 
தேனின் சுவையை
உறுஞ்சுகின்றன




Saturday, May 5, 2012

இன்னும் விரும்பவில்லையா


என்னை
இன்னும் நீ
விரும்பவில்லையா
நானே
மெல்லிய தேய்பிறை

என் இதையத்தை
சுற்றி
மிகக் குர்மையான
தீண்டக் காத்திருக்கும்
வில்போன்ற வாள்

அது என்னை
தீண்டும் முன்
சக்திமிக்க
தங்க ஒளியுடன்
நான் வளரவேண்டும்





Tuesday, May 1, 2012

உன் பிரிவால் மரமானேன்


உன்
பிரிவின் பின்

எனக்காக
வீடு திரும்புவாய்
என்ற நப்பாசையில்

பலகோடிகளில்
ஒண்டியாய்
ஓடிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் போல்
சூரியன், காற்றை
நேசிக்கும்
மலைச்சிகரத்தின்
ஒற்றை மரமானேன்





Sunday, April 29, 2012

அன்பின் எல்லை


அன்பு பயம்
இதன் மிகுதியோ
பெருமை மட்டுமே

கண்ணீர்
இரவுள் மட்டுமே

வார்த்தைகள் அனைத்தும்
என்னைவிட்டு தொலைந்தபின்
ஒரு மின்குமிழுடனான கதிரையே
எனதான வாசச்தலம்

உனதான நினைவுகளின் பின்
கனவு
பத்திரமாய் வீடுதிரும்பும்
உனதான வருகையை யாசித்து